காவல் துறையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு இரண்டு வாரத்திற்கு ஒரு முறை விடுமுறை அளிக்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். விரைவில் அது தொடர்பான அரசாணை வெளியிடப்படும் என தமிழக காவல் துறை தலைமை இயக்குனர் திரு. சைலேந்திர பாபு தெரிவித்தார்.