கோட்டாட்சியர் வாகனத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்; இதான் Reason!

2022-05-26 0

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவுக்கு உட்பட்ட பவழங்குடி கிராமத்திலிருந்து -- விருத்தாசலம் செல்லும் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் சாலை இல்லாமல் மண் சாலையாகவும் குண்டும் குழியுமாக இருப்பதாகவும், தரமான சாலை அமைத்து தர வலியுறுத்தி கிராம மக்கள் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் கிராம மக்கள் சாலைய முறையாக அமைத்து தர வலியுறுத்தி கோட்டாட்சியர் வாகனத்தை வழிமறித்து கோட்டாட்சியர் வாகனத்தை முற்றுகையிட்டு சாலை அமைக்க கோரிக்கை வைத்தனர். பின்னர் சாலையைப் பார்வையிட்ட கோட்டாட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Free Traffic Exchange

Videos similaires