ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது மதுபோதையில் இருந்த ஆசாமி ஒருவர் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் முன்பு சாலையின் நடுவில் படுத்துக்கொண்டார். இதனை பார்த்த காவல்துறையினர் அந்த நபரை சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர் .