குடியாத்தம் கருப்பு லீஸ்வரர் திருக்கோயில் தேர்த்திருவிழா; பக்தர்கள் உற்சாகம்

2022-05-11 2

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் அமைந்துள்ள சிவகாமசுந்தரி உடனுறை கருப்பு லீஸ்வரர் திருக்கோயில் ஆண்டுதோறும் சித்திரைத் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக தேர் திருவிழா நடைபெறவில்லை. மீண்டும் இந்த ஆண்டு இன்று காலை கருப்புலீஸ்வரர், சிவகாமசுந்தரி சாமிகளுக்கு திருமஞ்சனம் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுது. மேலும் முருகர் வள்ளி தெய்வயானை சிலைகளுக்கு அபிஷேக ஆராதணைகள் நடைபெற்று பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டு கைலாய வாத்திய, குழு வாத்தியம், மங்கள வாத்தியங்கள் முழங்க வான வேடிக்கையுடன் சுவாமி திருத்தேரில் எழுந்தருளிபக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Free Traffic Exchange

Videos similaires