அரசு பள்ளி மாணவர்களிடையே மோதல்; மாணவன் உயிரிழப்பு!

2022-04-30 23

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள பள்ளக்கால் புதுக்குடியில் கடந்த 25 ஆம் தேதி கைகளில் (ஜாதிவாரியாக )கயிறு கட்டுதல் சம்பந்தமாக மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் அதே பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் செல்வ சூரியன் (17) என்ற மாணவன் படுகாயத்துடன் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார் இதுபற்றி பாப்பாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Videos similaires