தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி; ஷாக்கான அதிகாரிகள்!

2022-03-21 5

மாற்றுத்திறனாளியான மூர்த்தி.இவர் குட்டப்பாளையம் பகுதியில் உள்ள பட்டா நிலத்தில் பஞ்சாயத்து அனுமதி பெற்று வீடு கட்டியுள்ளதாகவும், ஆனால் அனுமதியின்றி வீடு கட்டப்பட்டதாகவும், வேறு சமூகத்தினர் இருப்பதால் தனக்கு அனுமதிக்க முடியாது என பஞ்சாயத்து தலைவர் நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மூர்த்தி தனது குடும்பத்துடன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நிலையில் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார் உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி தண்ணீர் உற்றி அவரை மீட்டு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.