ஒரே நேரத்தில் இரண்டு கைகளால் எழுதும் சிறுமி!#viral

2020-11-06 4

கர்நாடகாவில் வசிக்கும் சிறுமி ஒருவர், ரஜினியின் சிவாஜி பட பாணியில் ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும், வேறுவேறு மொழிகளில் எழுதுவது பாராட்டுக்களை பெற்றுள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் வசிக்கும் 16 வயது மாணவியான ஆதி ஸ்வரூபா என்பவர், ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் வெவ்வேறு மொழிகளில் எழுதுகிறார். ஒரு கையில் ஆங்கில மொழியிலும், மற்றொரு கையில் கன்னட மொழியிலும் எழுதும் திறன் அவருக்கு உண்டு. இரண்டு கைகளாலும் தனித்தனியாக எழுதும் நேரத்திலும் அவர் ஒரு நிமிடத்தில் 45 வார்த்தைகளை எழுத முடிகிறது என்பது கூடுதல் சிறப்பம்சம்.
#viral #Viralvideo #Handwriting

Free Traffic Exchange

Videos similaires