காலை நேரம்... சென்னை மாநகரின் பரபரப்புடன் சேர்ந்து அவரும் இயங்குகிறார். அவரின் முறுக்கேற்றும் கரங்களில் சென்னையின் மூலை, முடுக்குகளுக்கு விரைகிறது அந்த ஆட்டோ. தன் பயணாளர்களை பத்திரமாக அவரவர் இடங்களில் கொண்டுசேர்க்கிறார். 40 வயதிலும் சற்றும் சோர்வடையாமல் சுழல்கிறார் ராஜீ அசோக்.