ஒடிசா புவனேஸ்வரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக பணியாற்றுபவர் காவல்துறை அதிகாரி அருண் போத்ரா. இவர் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட வீடியோ பார்ப்பவரின் மனதைக் கரைய வைத்துக்கொண்டிருக்கின்றது. அந்த வீடியோவில் பணிக்குச் செல்லும் தந்தையைப் பிரிய மனமில்லாமல் காலைப் பிடித்துக்கொண்டு அவருடைய மகன் அழும் காட்சி உள்ளது.