ஒரு கடலில் பவளப்பாறைகள் அதிகமாக இருந்தால், அந்த கடல் பகுதி வளமாக இருக்கிறது என்று அர்த்தம். மீன்கள் அதிகளவு இருக்கின்றன என்று பொருள். அந்த பவளப் பாறைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், ஆறு கடலில் கலக்க வேண்டும். வெப்பநிலை சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். அதாவது, வளி மண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு அதிகரித்தால், அந்தவாயு கடல் நீரில் கரையும் அளவும் அதிகரிக்கும்.