கத்தியை காட்டி மிரட்டிய 10 பேர் கொண்ட கும்பல் !!- வீடியோ

2019-01-29 152

10 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த கச்சிராயபாளையம் அருகே உள்ள சிவகங்கை கிராமத்தை சேர்ந்த செம்மலை என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவருகிறார்.அவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர் .விட்டில் செம்மலை தாய் அழகம்மாள் ,மனைவி செல்வி மற்றும் மகள் ஆகிய மூவர் இருந்த போது இரவு 10 பேர்கொண்ட கும்பல் அவரது வீட்டினுள் நுழைந்து மூவரையும் கட்டி போட்டு நகைகளை கொள்ளையடிக்க முயன்றனர்.அப்போது தங்கள் வீட்டில் 127 பவுன் நகை இருப்பதாகவும்,தங்கத்தால் வெங்கடாசலபதி சிலை உள்ளதாகவும் கொள்ளையர்கள் தெரிவித்தனர் அப்போது செல்வி பணம் இல்லையென்றும் ,நகைகள் அனைத்தும் இல்லையெனகூறியுள்ளார்.பிறகு தங்களிடம் உள்ள அனைத்து நகைகளை கழட்டி கொடுங்கள் என கேட்டுள்ளனர்.அப்போது அனைவரும் நகைகளை கழட்டி கொடுத்துள்ளார்கள் .பிறகுதங்களுடைய எதிரிதான் எங்களை வரவழைத்தனர்.பணத்தையும் நகையையும் கொடுக்கவில்லை என்றால் அவர்கள் கொலை செய்து விடுவார்கள் என மிரட்டியுள்ளனர் .பிறகுவீட்டின் ட்ராவில் உள்ள இரண்டு ஏ டி எம் களை எடுத்து கொண்டும் 10 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டும் மூவரை கட்டி.போட்டு விட்டு சென்றுவிட்டனர்.பிறகு சம்பவம்.குறித்துகச்சிராயபாளையம் போலிசாரிடத்தில் புகார் அளித்ததன் பேரில் கச்சிராயபாளையம் போலிசார் விசாரணை மேற்கொண்டனர்.பிறகு சம்பவ இடத்திற்க்கு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஜெயகுமார் பாதிக்கபட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டார் .மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கபட்டு விசாரணைமேற்கொண்டு வருகின்றனர் ..



Des : Gang of 10 people threatened with knife !!

Free Traffic Exchange

Videos similaires