மதுவின் தீமை குறித்து விழிப்புணர்வு பேரணி Awareness march on alcohol abuse

2019-01-25 2

தஞ்சாவூர் தமிழக அரசின் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பில் மதுப்பழக்கத்திற்கு எதிரான மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியில் பள்ளி,கல்லூரி, மாணவ, மாணவிகள் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தினர் பங்கேற்ற பேரணியை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை துவக்கி வைத்தார். ரயில்வேநிலையத்திலிருந்து துவங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசு ராஜா மேல்நிலைப் பள்ளியை சென்றடைந்தது மாணவர்கள் மதுவினால் ஏற்படும்தீமைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி சென்றதுடன் மதுப்பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து பதாதைகளும் எடுத்துச் சென்றனர்.கலால் உதவி ஆணையர் தவச் செல்வம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

Des : Awareness march on alcohol abuse

Videos similaires