சிறுமிகளுக்கு தொடரும் பாலியல் தொல்லை…வீடியோ

2018-09-14 122

சிறுமியை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தவரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராணிப்பேட்டை புளியங்கன்னு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். அதே பகுதியில் கார்மெண்ட்ஸ் தொழிற்சாலை நடத்தி வருகிறார் இவரிடம் 16 வயது சிறுமி ஒருவர் குடும்ப வறுமை காரணமாக தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த இருதினங்களுக்கு முன்பு பணிக்கு சென்ற சிறுமி வீடுதிரும்பவில்லை. இது குறித்து அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது கார்மெண்ட்ஸ் உரிமையாளரான வெங்கடேசன் கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தல் செய்து வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வெங்கடேசனை போக்ஸ்கோ சட்டத்தில் கைது செய்த போலீசார் சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். தொழிற்சாலையின் உரிமையாளரே சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Videos similaires