எவ்வித அராஜகங்களிலும் ஈடுபடலாம் என்ற தைரியத்தில், பாஜக செயல்படுவது கண்டிக்கத்தக்கது - மு.க ஸ்டாலின்.

2018-09-05 0

தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை முன்னிலையில் பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பிய மாணவி சோஃபியா கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இது தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மீண்டும் டிவிட்டரில் பதவிட்டுள்ளார் அதில்"கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் விதத்தில்,தங்களின் பினாமி அதிமுக அரசு தமிழகத்தில் இருப்பதால் எவ்வித அராஜகங்களிலும் ஈடுபடலாம் என்ற தைரியத்தில் பாஜக செயல்படுவது கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.