தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலத்தில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக உள் தமிழகத்தின் சில மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருபுவனம் மற்றும் விருதுநகர் நகர் பகுதிகளில் தலா 4 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது