நீட் தேர்வை தமிழகம் மட்டுமல்லாது அகில இந்திய அளவில் ரத்து செய்ய வேண்டும் - தொல்.திருமாவளவன்

2018-09-01 0

நீட் தேர்வால் மரணமடைந்த மாணவி அனிதாவுக்கு முதலாமாண்டு நினைவு அஞ்சலி செலுத்துவதற்காக அரியலூர் செல்ல திருச்சி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரியலூரில் நூலகம், அறக்கட்டளை மற்றும் திராவிடர் கழக தலைவர் வீரமணி தலைமையில் அனிதாவின் திருவுருவ சிலை திறக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும், நீட் தேர்வை தமிழகம் மட்டுமின்றி அகில இந்திய அளவில் ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Videos similaires