கிரண்பேடி பாஜவின் ஏஜெண்டாக செயல்படுகிறார்- முதல்வர் ஆவேசம்- வீடியோ

2018-07-21 208

துணை நிலை ஆளுநர் பாஜகவின் ஏஜென்டாக செயல்பட்டு ஆளும் அரசுக்கு கலங்கம் ஏற்படுத்துவதாக முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

புதுவை மாநில முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று புதுவை சட்டபேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதுடன் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட சட்ட வரையறையை துணை நிலை ஆளுநருக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன் அனுப்பியதாகவும் ஆளுநர் பட்ஜெட் குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டதற்கு அதற்கு உரிய பதில் அளிக்கப்பட்டது என்றார். ஆனாலும் துணைநிலை ஆளுநர் உள்நோக்கத்துடனும் அரசிற்கு கலங்கம் ஏற்படுத்தும் விதமாக சட்ட வரையறைக்கு ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்து காலம் தாழ்த்தி வருவது ஏற்புறையது அல்ல என்று கூறினார். மேலும் துணை நிலை ஆளுநர் யாருடைய பேச்சை கேட்டு பாஜகவின் ஏஜெண்டாக செயல்படுகிறாரோ என்ற ஐயம் உள்ளதாகவும் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

des: Chief Minister accused the Deputy Governor of the BJP acting as an agent of the BJP and mobilizing the ruling government.

Free Traffic Exchange