செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவத்தில் ஈடுபட்டு வந்த 3 இலங்கையர் கைது

2018-07-17 3

இலங்கையை சேர்ந்த அகதிப் ராஜன் என்ற பாண்டியன்,அவரது மனைவி ரூபா மற்றும் நிஷாந்தன் ஆகியோர் இலங்கையிலிருந்து அகதிகளாக வந்து திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அகதிகள் முகாமில் வசித்து வந்துள்ளனர். ஆடம்பர வாழ்க்கைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயின் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் ராமநாதபுரத்தை அடுத்த இளமனூர் பகுதியில் உள்ள மூதாட்டி ஒருவரிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இந்நிலையில், பாம்பன் அருகே கடல் வழியாக இலங்கைக்கு தப்பி செல்ல முயன்ற 3 பேரை ராமநாதபுரம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Free Traffic Exchange

Videos similaires