விசாரணைக்கு வந்த கைதிக்கு செல்போன், சிம் கார்டுகளை கொடுக்க முயன்ற 5 பேர் கைது

2018-07-17 0

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாணரப்பேட்டை சூசைராஜ் புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் இருந்து, விசாரணைக்கு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார், அப்போது அவரது நண்பர்கள் சங்கர், அப்பு, அப்துல் அஜீஸ், திருமால் மற்றும் முகமது ஃபரித் ஆகியோர் தாங்கள் கொண்டு வந்த காலணிக்குள், செல்போன், சிம் கார்டு, சார்ஜர் ஆகியவற்றை மறைத்து வைத்து கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கைதி சூசைராஜ் நீதிமன்றத்திற்குள் செல்ல காலணியை விடும் போது இவர்கள் கொண்டு சென்ற காலணியை மாற்ற முயன்ற போது அங்கிருந்த போலீசார் இவர்களை பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து செல்போன் இருந்த செருப்பு, செல்போன் சிம்கார்டு, கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Videos similaires