சென்னையில் காவலர்கள் ரத்த தானம் முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

2018-07-17 1

தமிழக காவல்துறை சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் இந்த முகாம்களை சென்னையில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். காவல்துறையில் பணியாற்றுபவர்கள் கட்டாயம் ரத்த தானம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் போலீசார் ரத்த தானம் செய்யவுள்ளனர். சென்னையில் மட்டும் 2 ஆயிரம் போலீசார் ரத்த தானம் செய்ய உள்ளனர். இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், ஜெயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Videos similaires