வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை

2018-07-17 0

வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்காடு அடுத்துள்ள கலவை பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன். இவர் கடந்த1998-ம் ஆண்டு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் கைதியாக இருந்து வந்தார். இந்நிலையில், காலை கைதிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட போது கஜேந்திரன் இல்லாதது தெரியவந்தது. இதனையடுத்து, சிறை காவலர்கள் சிறை அறையில் ஆய்வு செய்த போது கஜேந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சிறை காவலர்கள் கஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், கைதியின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Videos similaires