deS:கடலூரில் இரவு பணியை முடித்து விட்டு வீட்டுக்கு வந்த பெண் போலீஸ் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரில் ஆயுதப்படை போலீசாக பணியாற்றி வருபவர் சத்தியசீலன். இவரது மனைவி 27 வயதான கவிதா. இவரும் ஆயுதப்படை போலீஸாகத்தான் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருமே கடலூர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.