des:செத்த பிணமே ஆனாலும் பணத்தை பிடுங்கி கொண்டுதான் புதைக்குழிக்கே அனுப்புவார்கள் போலிருக்கு. மனசாட்சியை அடகுவைத்து மனிதம் இழந்தவனின் செய்தி இது. கோவை அரசு மருத்துவமனை. ஈரோடு, உடுமலை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் இறந்த உடல்கள் இங்கு கொண்டு வரப்படும். இந்த உடல்கள் மருத்துவமனையின் பிணவறையில் வைத்து உடற்கூறு ஆய்வு செய்யப்படும். பின்னர் அவை குடும்பத்தார்களிடம் ஒப்படைக்கப்படும். இதுபோல உடற்கூறு ஆய்வுக்கூடத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 10 முதல் 20 பிரேதங்கள் வரை பரிசோதனை நடத்தப்படுவது வழக்கம்.