உத்தர பிரதேச மாநிலம், இட்டாவில் 8 வயது சிறுமி ஒருவர் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார். பாஜக ஆளும் மாநிலங்களில் தற்போது தொடர்ந்து இது போன்ற பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்புணர்வு கொடுமைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இட்டா என்ற நகரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. போலீஸ் இதில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.