மின்சாரம் தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் பாமக நிர்வாகி- வீடியோ

2018-04-12 994

ரயில் மறியலின் போது மின்சாரம் தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள பாமக நிர்வாகி மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டுவரபட்டார்

திண்டிவனத்தில் காவரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பாமக சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது அப்போது சென்னையிலிருந்து வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்துபோராட்டம் நடத்தினர். ரயில் பெட்டி மீது ஏறி கோஷம் போட்ட திண்டிவனதை சேர்ந்த ரஞ்சித் மின்சாரம் தாக்கி படு காயம் அடைந்தார். அவரை மீட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஞ்சித்துக்கு 65% உடலில் தீக்காயங்களுடன் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது நல்ல நிலையில் சுயநினைவு உள்ளது என்பதால், அவரை மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்

Videos similaires