காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2007-ஆம் ஆண்டு காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை வெளியிட்டது. அதில் 192 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
எனினும் 192 டிஎம்சி நீர் போதாது என்பதால் கூடுதலாக 50 டிஎம்சி தண்ணீர் கூடுதலாக திறந்து விட வேண்டும் என்று இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
SC will give judgement on tomorrow in Cauvery water dispute