தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக துரைமுருகன் பேச்சு- வீடியோ

2017-11-25 187

இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கிய பின்னர் ஆர்கே நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பின்னால் ஏதே ஒரு பெரிய பலம் பின்னால் இருந்து செயல்படுவதாகவும் அதை மோதி பார்க்க தயாராக இருப்பதாக துரை முருகன் தெரிவித்துள்ளார்.

லாலாப்பேட்டையில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழாவில் பங்கேற்ற சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆர்கே நகரில் பணப்பட்டுவடா நடத்துள்ளதாக கூறி தேர்தல் ஆணையம் தேர்தலை தள்ளி வைத்தது. மீண்டும் டிசம்பர் மாதம் தேர்தலை நடத்துவதாக அறிவித்துள்ளது. இதற்கு எல்லாம் மக்களிடம் தேர்தல் ஆணையம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றார். இது நாள் வரை தேர்தல் ஆணையம் ஆர் கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவிக்காமல் தற்போது இரட்டை இலை சின்னத்தை வழங்கியவுடன் தேர்தல் தேதியை அறிவித்துள்ளதால் ஏதோ ஒரு பலம் பின்னல் இருந்து செயல்படுவது நன்றாக தெரிகிறது என்றும் எதுவாக இருந்தால் திமுக அதனை சந்திக்க தயாராக இருப்பதாகவும் துரைமுருகன் தெரிவித்தார்.

Des : Durai Murugan said that after a double leaf symbol, the RK Nagar constituency was announced by the Election Commission after a large strength behind and that it is ready to collide with it.

Free Traffic Exchange

Videos similaires