17 வயது சிறுவனை பலாத்காரம் செய்த தொழிலதிபர் மனைவி..வீடியோ

2017-11-18 127

17 வயது சிறுவனை பலாத்காரம் செய்ததாக 24 வயது குடும்ப தலைவி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது பெங்களூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் பகுதியை சேர்ந்தவர் 24 வயது பெண்மணி எலிசா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது கணவர் வாட்டர் சப்ளை பிசினஸ் செய்து வருகிறார். இருவருக்கும் 2 வருடங்கள் முன்பு திருமணமானது. தம்பதிகளுக்கு இன்னும் குழந்தை இல்லை. இந்த நிலையில், கடந்த மாதம் 24ம் தேதி முதல் திடீரென அந்த பெண் மாயமாகிவிட்டார். இதுகுறித்து ராபர்ட்சன்பேட்டை காவல் நிலையத்தில் எலிசா கணவன் புகார் அளித்தார். மனைவி போட்டோவையும் போலீசாரிடம் கொடுத்திருந்தார். போலீசார் விசாரணையை ஆரம்பித்திருந்த நிலையில், மற்றொரு திருப்பம் ஏற்பட்டது. எலிசா வீட்டு ஏரியாவை சேர்ந்த 17 வயது சிறுவனை 24ம் தேதி முதல், காணவில்லை என அவரது தந்தை ராபர்ட்சன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தார். அப்போது போலீசாரின் டேபிளில் எலிசாவின் போட்டோ இருப்பதை பார்த்த அவர் என்ன நடந்தது என விசாரித்துள்ளார். போலீசார் எலிசாவை காணவில்லை என என கூறியுள்ளனர்.


A 24-year-old homemaker from Kolar Gold Fields (KGF) has been arrested for allegedly kidnapping and raping a 17-year-old boy.

Videos similaires