அணையின் நீர்மட்டம் உயர்வு- வீடியோ

2017-11-01 343

ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து அணைநிரம்பும் சூழலில் உள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது வீராணம் ஏரி. கடலூர் மாவட்டம் முழுவதிற்கும் இந்த ஏரிதான் நீர் ஆதாரமாக உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 47,60 அடியாகும். தற்போது வினாடிக்கு 969 கனநீர் வந்து கொண்டிருப்பதால் ஏரி நிறம்பும் நிலையில் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரும் வீராணம் ஏரிக்கு வந்தடைந்துள்ளதாலும் கனமழையின் காரணமாகவும் அணையின் நீர்மட்டம் மலமலவென உயர்ந்து 42,5 அடியாக உள்ளது. வீராணம் ஏரி நிறம்பி வருவதால் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Dis : Increasing water to the lake has increased the lake's lake and the lake is in full swing.

Videos similaires