திருமணமான 4-வது நாளில் புதுப்பெண்ணுக்கு ஆயுள்தண்டனை! ஏன் தெரியுமா?- வீடியோ

2017-11-01 20,698

திருமணமான நான்காவது நாளில் புதுப்பெண்ணுக்கு திருச்சி மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி கோட்டை பகுதி பட்டவர்த் ரோட்டை சேர்ந்த 80 வயதான முத்துரத்தினாவதி கடந்த 2015ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் முத்துரத்தினாவதி கொலை செய்யப்பட்டார். அவரை நகைக்காக மர்மநபர்கள் கம்பியால் குத்தி கொலை செய்ததாக அவரது வீட்டில் மாடியில் வாடகைக்கு தங்கியிருந்த திவ்ய பிரியா என்ற பெண் கூறினார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர்.இதில் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் மர்மநபர்கள் யாரும் அவரது வீட்டிற்கு வந்த போன்ற காட்சிகள் இல்லை. மேலும் திவ்ய பாரதி கூறியது போன்ற சம்பவம் நடக்கவில்லை என்றும் போலீசார் கண்டுபிடித்தனர்.இதையடுத்து அன்று வீட்டில் இருந்த திவ்யபிரியாவின் பக்கம் போலீசாரின் சந்தேகம் திரும்பியது. அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

Trichy Women's Court has sentenced a life sentence to the a young woman the fourth day of marriage. Young woman named Divya priya %illed her house owner on 2015th

Videos similaires